பயணிகளை காப்பாற்றி பரிதாபமாக உயிரிழந்த பேருந்து ஓட்டுநர்! நீலகிரியில் பெரும் சோகம்…

Published by
பால முருகன்

நீலகிரி :பயணிகளை காப்பாற்றி விட்டு தன் உயிரை காப்பாற்ற முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநரின் குடும்பத்திற்கு தமிழக அரசால் ரூ.3 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கெங்கரை கிராமத்தை சேர்ந்தவர் பிரதாப் (வயது 43). அரசு பேருந்து ஓட்டுநரான இவர், இன்று காலை 6 மணி அளவில் கூட்டாடாவிலிருந்து கோத்தகிரி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். பேருந்து கோத்தகிரியை நெருங்கும்போது, சாலை ஓரம் மின் கம்பி ஒன்று அறுந்து தொங்கியவாறு கிடந்துள்ளது. எதிர்பாராத விதமாக அந்த கம்பி பேருந்தின் மீது உரசி சத்தம் கேட்டதுடன், தீ பொரி பறந்துள்ளது.

இதை சுதாரித்துக்கொண்ட ஓட்டுநர் பிரதாப், பேருந்தை பொருமையாக நிறுத்திவிட்டு பயணிகள் மற்றும் நடத்துநரை அதில் இருந்து இறங்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதை கேட்ட பயணிகள் மற்றும் நடத்துநர் ஆகிய அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே இறங்கி ஓடியுள்ளனர். அதனை தொடர்ந்து பேருந்தில் இருந்து இறங்க பிரதாப் முயற்சி செய்துள்ளார்.

ஆனால் கண் இமைக்கும் நொடியில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை அடுத்து பிரதாப் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்ததாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து அங்கு சென்ற போலீஸார் பிரதாப்பின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உடனடியாக அந்த மின் கம்பி இருந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பராமரிப்பு பணிகளுக்கான வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதாப்பின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவித்ததுடன் ரூ.3 லட்சம் நிதி உதவியும் அறிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago