திருப்பூர் மாவட்டத்த்தில் உள்ள காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி ஆவார்.இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.மேலும் இவர் டிக் டாக்கில் அடிக்கடி வீடியோக்களை பதிவு செய்து நிறைய லைக்குகளையும் பெற்றுள்ளார்.
இதனால் மேலும் தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு டிக் டாக் பிரபலமாக உருவாக்கியுள்ளார்.இவரது வீடியோவுக்கு பலர் கமெண்ட் செய்து வந்தாலும் கோயம்புத்தூரில் உள்ள செலக்கரச்சலை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனிபட்ட முறையில் பேசியுள்ளார்.
பின்னர் தொலைபேசி நம்பரை வாங்கிய அவர் தொடர்ச்சியாக பேச தொடங்கியுள்ளார்.இதன் காரணமாக இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.இதை பயன்படுத்திய வேல்முருகன் சிறுமியிடம் ஆசைவார்த்தைகளை கூறியுள்ளார்.
பின்னர் தொடர்ந்து உல்லாசம் அனுபவித்த அவர் சிறுமி கர்ப்பம் தரித்த பிறகு பேசுவதை படிப்படியாக குறைத்துள்ளார்.இதனால் என்னசெய்வது என அறியாமல் இருந்த மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
பின்னர் வீட்டிலும் யாரிடமும் பேசாமலே தனிமையில் இருந்துள்ளார்.பின்னர் வாழ்க்கையை வெறுத்த சிறுமி தற்கொலை செய்ய முடிவெடுத்து மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.
இதில் பலத்தகாயமடைந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.இதன் காரணமாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது .
பின்னர் விரைந்து வந்த காவல்துறையினர் சிறுமியின் வாக்குமூலத்தை வாங்கி போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து வேல்முருகனை கைது செய்துள்ளனர்.மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…