பிறந்து 15 நாளே ஆன குழந்தையை தந்தையே கொலை செய்த கொடூரம்!

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே, சுந்தரேசபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் வரதராஜன் – சவுந்தர்யா தம்பதியினர். கடந்த 15 நாட்களுக்கு முன்பதாக இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. வரதராஜன் பெண் குழந்தையை விரும்பாத காரணத்தால், மருத்துவமனைக்கு சென்று குழந்தையை பார்க்கவில்லை.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சவுந்தர்யா, 3-வது நாளே தனது கணவர் குழந்தையை கொலை செய்ய எடுத்து சென்றதை பார்த்து, பயத்தில் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, மாமியார் வீட்டிற்கு சென்று தான் திருந்தி விட்டதாக கூறி மனைவியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து, நேற்று மாலை குழந்தையை காணவில்லை என தேடிய போது, குழந்தை தென்பெண்ணை ஆற்றங்கரையில் புதைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, வரதராஜனை போலீசார் விசாரித்த போது. குழந்தையை கொலை செய்து புதைத்ததை அவர் ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து, போலீசார் வரதராஜனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பெண் குழந்தை என்பதற்காக பிறந்து 15 நாளே ஆன குழந்தையை இவ்வாறு கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025