மாப்பிள்ளையை ஏமாற்றி காதலனுடன் கைகோர்த்த மணப்பெண்..!

Default Image

சென்னை மாயவரத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மகள் மோனிகா (20). இவருக்கும் உறவினரான மனோஜ் என்பவருக்கும் நேற்று திருமணம் நடக்க இருந்த நிலையில் ,மோனிகா கடந்த 15-ம் தேதி தன் தோழியை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால்  மோனிகா இரவு 9 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை.
இதனால் அச்சம் அடைந்த மகேஷ் மோனிகாவிற்கு போன் செய்து பார்த்த போது போன்  சுவிட்ச் ஆப் ஆகியிருந்தது. பின்னர் மகேஷ் மோனிகாவின் நண்பர்களுக்கும் போன் செய்தும் , வீட்டிற்கும் சென்று விசாரித்தனர்.
மோனிகா எங்கேயும் இல்லை பின்னர் மகேஷ் போலீஸாரிடம் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை மோனிகா தனது தந்தை மகேஷுக்கு போன் செய்து தான் கார்த்திக் என்பவரை  திருமணம் செய்து கொண்டதாக கூறிவிட்டு மோனிகா காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
பின்னர் அவரிடம்  நடத்திய விசாரணையில் மோனிகா கார்த்திக் என்பவரை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாகவும் , இதற்கு தனது தந்தை மகேஷ் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அதனால் மனோஜ் உடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தது தெரியவந்தது. இந்நிலையில் போலீசார் பெற்றோர்களை வரவைத்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்