பணி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ்.! அரசு மருத்துவர்கள் அறிவிப்பு.!

Default Image

இன்று மதியம் 3 மணிக்கு மேல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்திருந்த பணி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உரிய மருத்துவ உபகாரணங்கள் சரிவர கிடைக்கவில்லை என கூறி மருத்துவர்கள் இன்று மதியம் 3 மணி முதல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை மருத்துவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், மருத்துவர்களுக்கு தேவையான உரிய வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன் பின்னர், இன்று மதியம் 3 மணிக்கு மேல் மருத்துவர்கள் அறிவித்திருந்த பணி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்