கடற்கரையில் சுத்தம் செய்த குப்பைகளை கடற்கரையிலேயே விட்டுச் சென்ற பாஜகவினர்..!

Default Image

குப்பைகளை அகற்றிய பின்னர் பாஜக நிர்வாகிகள் குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாள் பாஜகவினரால் சிறப்பாக  கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜகவினர் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணியில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குப்பைகளை அகற்றிய பின்னர் பாஜக நிர்வாகிகள் ப்ளாஸ்டிக் கவர்களில் கட்டப்பட்ட குப்பை மூட்டைகளை மீண்டும் கடற்கரையிலேயே விட்டுச் சென்றனர். இதற்கு பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாம் என்று பலர்  சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்