தமிழகத்தில் இன்னும் பாஜக காலூன்றவில்லை என்று இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனவும் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சிகளுடன் சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என கூறினார்.
மத்தியில் ஆட்சி இருப்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என தெரிவித்தார். அதிமுக VS திமுக என்று இருந்த நிலையில் தற்போது பாஜக VS திமுக என மாறிவிட்டது என்று வி.பி.துரைசாமி கூறினார்.இவரது கருத்து அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு திமுகவினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து திமுக எம்பி டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், திமுகவிற்கு ,பாஜகவிற்கும் போட்டி என்றால் கொள்கை அளவிலே திமுக பாஜகவிற்கு நேரெதிரான கொள்கை என்பதில் மாற்று கருத்து இல்லை.அவர்கள் மதவாதம் பேசுகிறார்கள்.நாங்கள் மத நல்லிணக்கம் பேசுகின்றோம்.எனவே கொள்கை ரீதியாக பாஜகவிற்கும், எங்களுக்கும் போட்டி. ஆனால் தேர்தல் கூட்டணி என்று வரும்போது அவர்கள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருக்கின்றனர். அதிமுக அவர்களுக்கு மக்களவை தேர்தலில் 5 இடங்களை கொடுத்தது.அந்த இடத்தில் தான் அவர்களும் இருக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரை அவர்கள் இன்னும் தமிழகத்தில் காலூன்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…