தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது…! மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் சம உணர்வோடு வரும் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும்.பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் நாட்டிற்கு பல முதலீடுகள் வந்துள்ளது.கோவில் சொத்துக்கள், சிலைகளை கணக்கெடுக்க அந்தந்த பகுதி பெரியவர்களை கொண்டு கமிட்டி அமைக்க வேண்டும்.தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.