இதுவரை யாசகம் பெற்று 1 லட்சம் கொரோனா நிதி வழங்கிய யாசகர்.!

Default Image

இதுவரை யாசகம் பெற்று 1 லட்சம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கிய யாசகர் பூல் பாண்டி.

கொரோனா  காலத்தில் தங்களால் முயன்ற உதவிகளை செய்யுமாறு தமிழக முதல்வர் கோரிக்கை வைத்த நிலையில் பல பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும்  பொதுமக்கள் என பலரும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்களால் முயன்ற நிதியை வழங்கினார்.

இந்நிலையில், மதுரையில் பூல் பாண்டியன் என்ற யாசகர் முதல்வரின் நிவாரண நிதிக்காக யாசகம் பெற்று இதுவரை ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். இன்று பத்தாவது முறையாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பத்தாயிரம் ரூபாய் கொடுத்து உள்ளார்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்