சட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது ஸ்கூட்டியில் வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில், திமுக நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் இடையூறு ஏற்படுத்தும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் நீதிமன்றம் அரசிடம் சரமாரியாக கேள்விகளை முன் வைத்தது.பேனர் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின் அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் சட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க மாட்டோம் என்றும் பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …