பேனர் வைக்க மாட்டோம்-திமுக பிரமாணப்பத்திரம் தாக்கல்

Default Image

சட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில்  சுபஸ்ரீ என்ற இளம்பெண் தனது  ஸ்கூட்டியில்  வந்து கொண்டிருந்தபோது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.ஆனால் அவர் பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது.இதனால் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில், திமுக நிகழ்ச்சிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் இடையூறு ஏற்படுத்தும் பேனர்கள் வைக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற  விசாரணையில் நீதிமன்றம் அரசிடம் சரமாரியாக கேள்விகளை முன் வைத்தது.பேனர் வைக்கமாட்டோம் என்ற அரசியல் கட்சிகளின் அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தது.

இந்த நிலையில்  சட்டவிரோதமாக பேனர் வைக்கமாட்டோம் என்று திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில், பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைக்க மாட்டோம் என்றும்  பேனர் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
mp sudha anbumani
Jayalalithaa and pm modi
nzvsban
vidaamuyarchi ott release date
kaliyammal tvk
anbumani sekar babu