இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,000 தாண்டியது.கொரோனாவை கட்டுப்படுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையெடுத்து தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் , தன்னார்வ சேவை அமைப்புகளும் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை யாரும் நேரடியாக வழங்க கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் டிடிவி தினகரன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் ,கொரோனா நோய்க்கு எதிரான போராட்டத்தில் அரசியல் கட்சிகளும் , தன்னார்வ சேவை அமைப்புகளும் அரசுக்கு எல்லாவகையிலும் பக்கபலமாக இருந்து வருகின்றன. ஆனால் 20 நாட்களாக ஊரடங்கு தொடர்வதால் பல இடங்களில் அன்றாட வருமானத்தை நம்பி இருந்த தொழிலாளர்கள் ஏழை , எளிய மக்கள் பலரும் உணவுக்காக தத்தளித்து வருகின்றனர்.
அதனால் அவர்களுக்கு உதவ முன் வருகிறார்கள்.ஒடிசா , கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற சமுதாய உணவகங்களை ஏற்படுத்தி பசித்தவர்களுக்கு உணவு கொடுத்தால் மற்றவர்கள் ஏன் அதனை செய்யப் போகிறார்கள். தடுப்பு பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு முககவசங்களையும் ,தற்காப்பு மருத்துவ உபகரணங்களையும் அரசு வழங்கியிருந்தால் மற்றவர்கள் ஏன் அவர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள்.
இந்நிலையில் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை யாரும் நேரடியாக வழங்க கூடாது என்று தமிழக அரசு தடை விதித்திருப்பது மனிதநேயமற்ற செயல் ஆகும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…