சென்னையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த சில மணிநேரத்தில் இறந்ததால், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நேற்று 557 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,228ஆக அதிகரித்துள்ளது. மேலும், சென்னையில் 134 கர்ப்பிணி பெண்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, சூளையை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு, எழும்பூர் தாய்-சேய் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அவருக்கு பிரசவ வழி ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்பொழுது பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் அந்த குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே இருந்துள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனையடுத்து, அந்த குழந்தைக்கு ஓமாந்தூரார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று இல்லையென தெரியவந்துள்ளது. குழந்தை இறந்த சம்பவம், அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…
ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…
டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…