அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையான மருத்துவம் சென்றவடைவதாக கூறி இந்திய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என விருது வழங்கபட்டது. – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.
சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை விழாவில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்துகொண்டார். அந்த விழாவில் அவர் பேசுகையில் தமிழகத்தின் மருத்துவ சேவை பற்றி பெருமையாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், இந்திய அளவில் மருத்துவத்துறையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழக அரசும் , தமிழக மருத்துவத்துறையும், தனியார் மருத்துவ சேவையும் ஒருங்கிணைத்து செயல்படுவதால் தான் இந்த சிறப்பு கிடைத்துள்ளது என குறிப்பிட்டார்.
மேலும், கடந்த ஒரு வார காலமாக ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. கடந்த 7,8 மாதங்களாக யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை. சீனாவில் இன்னும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. என குறிப்பிட்டார்.
மருத்துவ துறையில் ஏராளாமான விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளன. காசி, வாரணாசியில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இந்திய அளவில் மருத்துவ மாநாடு நடைபெற்றது. மாண்டஸ் புயல் காரணாமாக நம்மால் செல்ல முடியவில்லை. பங்கேற்க அழைத்தார்கள் தமிழகம் சார்பாக மூத்த மருத்துவ அதிகாரி சென்றார். அங்கு மத்திய அமைச்சர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் முறையான மருத்துவம் சென்றவடைவதாக கூறி தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என விருது வழங்கினார்கள் என பெருமையாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…