ஆதிக்க சாதியினரின் அட்டகாசம்! பட்டியலினத்தை சேர்ந்தவரை காலில் விழ வைத்த சம்பவம்!

Published by
லீனா

பட்டியலினத்தை சேர்ந்தவரை காலில் விழ வைத்த ஆதிக்க சாதியினர். 

கடந்த சில காலங்களாக பட்டியலினத்தவர்களுக்கு எதிரான, உயர் சாதியினரின் ஆதிக்க செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவர் பட்டியல் இன  வகுப்பை சேர்ந்தவர்.

இவர் 100 செம்மறி ஆடுகளை வைத்து தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில், பால்ராஜின் ஆடுகள் அருகிலுள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிவசங்கு என்பவருக்கு சொந்தமான ஆட்டு பட்டிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கு இடையே ஏற்கனவே முன்பகை இருந்து வந்துள்ளது. தனது பட்டிக்குள் ஆடு புகுந்ததால்,  சிவசங்கு அவரது உறவினர்களை அழைத்து பால்ராஜை தாக்கி, அவரை காலில் விழச் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல், இதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களிலும் பரப்பியுள்ளார்கள்.

இதனையடுத்து, மாவட்ட எஸ்.பி-யிடம் பால்ராஜ், இந்த சம்பவம் குறித்து புகார் அளித்துள்ள நிலையில், நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனு அளித்துள்ளார். இந்நிலையில், கயத்தார் காவல் நிலையத்தில்  சிவசங்கு, சங்கிலிபாண்டி, உடையம்மாள், பெரியமாரி, வீரையா, மகேந்திரன், மகாராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

வெயிட்டிங்லயே வெறி ஆகுது! ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…

2 hours ago

கருப்பு பெயிண்ட் அடிக்கிற முன்னாடி ஸ்கூல் போய் படிச்சிட்டு வாங்க…அண்ணாமலை பேச்சு!

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…

3 hours ago

சீக்கியர் கொலை வழக்கு : சஜ்ஜன் குமாருக்கு மீண்டும் ஆயுள் தண்டனை வழங்கிய டெல்லி நீதிமன்றம்!

டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…

4 hours ago

AUSvSA : ‘குறுக்கே வந்த கவுசிக் மழை’… போட்டியை ரத்து செய்தது ஐசிசி!

ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான  சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…

5 hours ago

எடுத்தது ஒரு விக்கெட் எதுக்கு இந்த சீன்? அப்ரார் அகமதை விளாசிய வசீம் அக்ரம்!

துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…

6 hours ago

மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!

சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…

6 hours ago