கலைஞர் சட்டப்பேரவையில் ஒரு தடவை மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான் என்று சொன்னார் – கீ.வீரமணி

Default Image

த்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின், தம் தந்தையிடமிருந்து உழைப்பையும், சித்தாந்தத்தையும் வரித்துக் கொண்டு பம்பரமாகச் சுற்றுகிறார் என ஆசிரியர் கி.வீரமணி ட்வீட். 

கலைஞர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சட்டப் பேரவையில் ஒரு தடவை சொன்னார், “மிக மிக என்று எத்தனை மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். அந்த மிக மிகப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவன் நான்” என்றார். அத்தகைய ஒருவர் எல்லா வகையிலும் உச்சத்தைத் தொட்டார் என்றால் அதற்குக் காரணம் என்ன?

அவரின் அயரா உழைப்பும், தம்மை தகுதியாக்கிக் கொள்ளும் முனைப்பும், தந்தை பெரியார்தம் திராவிடக்கொள்கை மீது வைத்த அளப்பரிய பற்றும்-பாடும்தானே! அவர் வழியில் முத்துவேல் கருணாநிதி மு.க.ஸ்டாலின், தம் தந்தையிடமிருந்து உழைப்பையும், சித்தாந்தத்தையும் வரித்துக் கொண்டு பம்பரமாகச் சுற்றுகிறார்

ஆம், கலைஞர் இளைஞர் உலகிற்கு உன்னத கலங்கரை விளக்கம் – உற்சாகப் பெருக்கம் – இளைஞர்கள் படிக்க வேண்டிய பொதுத் தொண்டின் புத்தகம். திராவிட இயக்கத்திற்கு ஏற்படும் சவால்களைச் சந்திப்போம். மதச் சார்பின்மைக்கும், சமூகநீதிக்கும் எதிராக ஏற்பட்டுள்ள அறைகூவலின் ஆணி வேரை வீழ்த்துவோம் என்ற சூளுரையை இந்நாளில் ஏற்போம். வாழ்க கலைஞர்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்