Tamilnadu BJP Leader Annamalai
அடுத்த வருடம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தொகுதி வாரியாக தேர்தல் பொறுப்பாளர்களை நியமிக்க ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் பொறுப்பாளர்களை தொகுதி வாரியாக நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். தேர்வு செய்யப்படும் பொறுப்பாளர்கள் எந்த குற்ற பின்னணியும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். முழுநேர கட்சி பணியாற்றுபவர்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, 10 நாட்களுக்குள் தொகுதி வாரியாக சிறப்பாக பணிபுரியும் வேட்பாளர்களை அடையாளம் கண்டு, தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தொகுதி வாரியாக சிறப்பாக செயல்படும் பாஜக நிர்வாகிகள் குறித்த பட்டியல் சேகரிக்கப்பட்டு தேசிய தலைமையிடம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி முறிவு ஏற்பட்ட பின் அண்ணாமலை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…