பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பினர் வழக்குகள் தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கு விசாரணை ஒற்றை நீதிபதி அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இரட்டை நீதிபதி அமர்வு :
ஒற்றை நீதிபதி அமர்வு தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் மற்றும் அவர் தரப்பில் ஜே.டி.சி பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்கு இரட்டை நீதிபதி அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
நேரடியாக இறுதி விசாரணை :
பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டில் இடைகால உத்தரவு பிறப்பிக்க கோரியிருந்தது. ஆனால், அந்த கோரிக்கையை இரட்டை நீதிபதி அமர்வு ஏற்க மறுத்துவிட்டது. இடைக்கால உத்தரவு என்பது வழக்கின் விசாரணையை பாதிக்கும் என்பதால் நேரடியாக இறுதி விசாரணையை தொடங்குகிறோம் என அறிவித்துவிட்டனர்.
அதன்படி, ஏப்ரல் 20ஆம் தேதி இந்த மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…