திருவள்ளூர் நகராட்சியில் உள்ள 18-வது வார்டுக்கு உட்பட்ட ஜெயா நகரில் உள்ள விஜயலக்ஷ்மி என்ற மூதாட்டி நேற்று முன்தினம் இரவு இறந்து உள்ளார்.அந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய அவரின் உறவினர்கள் உடலை சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர்.
அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.சுடுகாடு இருந்த இடத்தில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டு இருந்தது.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உடலை புதைக்க வந்த உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிறகு சர்வேயரை வைத்து அதிகாரிகள் நிலத்தை அளந்து பார்த்தபோது இந்த இடம் சுடுகாடு இல்லை பக்கத்தில் இருப்பதுதான் சுடுகாடு என அதிகாரிகள் கூறினர்.மேலும் பக்கத்தில் உடலையை அடக்கம் செய்யுமாறு அதிகாரிகள் கூறினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 40 ஆண்டுகளாக இந்த இடத்தில் தான் உடலை அடக்கம் செய்து வருகிறோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதைத்தொடர்ந்து திருவள்ளூர் வட்டாச்சியர் இந்த இடத்தில் உடலை புதைக்கக்கூடாது அப்படி புதைத்தால் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை கொடுத்தார்.இதனால் அந்த மூதாட்டியின் உடலை அருகில் புதைத்து விட்டு சென்றனர்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக நேற்றைய தினம், சென்னை வானிலை…
சென்னை : நடிகை பாலியல் புகாரில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மாலை 6 மணிக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர்…