தமிழகத்தில் நடைபெற்று வரும் கடந்த 5 மாத கால தி.மு.க-வின் விடியா ஆட்சியில், சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது, உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது.
திமுக ஆட்சியில் சமூக விரோதிகளின் அட்டகாசம் தலைவிரித்தாடுவதாகவும், நாட்டில் பெருகி வரும் குற்றச் சம்பவங்களை ஒடுக்குவதும், கிரிமினல்களை அடக்குவதும், மக்களை சுதந்திரமாக பயமின்றி இயங்க வைப்பதும், காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வரின் தலையாய கடமை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘தமிழகத்தில் நடைபெற்று வரும் கடந்த 5 மாத கால தி.மு.க-வின் விடியா ஆட்சியில், சட்டம், ஒழுங்கு சீர்கேடு அடைந்து, சமூக விரோதிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது, உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது. 2011-ல் மாண்புமிகு அம்மா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது,
தமிழகத்தில் வடமாநிலக் கொள்ளையர்கள் மற்றும் தமிழ் நாட்டு கிரிமினல்களின் அட்டகாசம் அதிக அளவில் இருந்தது. மாண்புமிகு அம்மா அவர்கள் காவல் துறைக்கு முழு சுதந்திரம் அளித்து, குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது இரும்புக் கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டதன் காரணமாக குற்றவாளிகள் அடக்கி ஒடுக்கப்பட்டனர் மற்றும் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கப்பட்டு, தமிழ் நாடு அமைதிப் பூங்காவாக திகழ்ந்தது. மாண்புமிகு அம்மா அவர்களைத் தொடர்ந்து, அம்மாவின் அரசும் இரும்புக் கரம் கொண்டு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக குற்றங்கள் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டன.
கடந்த வாரத்தில் தமிழகத்தில் அனைத்து ஊடகங்களிலும், செய்திகளிலும் பெரிய அளவில் பேசப்பட்ட குற்ற சம்பவங்கள் :
இப்படி குற்றச் சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இது போன்ற சம்பவங்கள் தமிழக மக்களை பீதியில் ஆழ்த்துவதோடு மட்டுமல்லாமல், கொதிப்படையவும் வைத்துள்ளது. இந்த விடியா தி.மு.க. ஆட்சியில் சமூக விரோத சக்திகளின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுகிறது.
இந்த அரசின் இயலாமையை உணர்ந்த ஆளுநர் அவர்கள், தமிழக DGP-யை அழைத்து வழங்கிய அறிவுரைக்குப் பின், சுமார் 12,000 பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. இதில் 2,000 பேர் வரை ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், மேலும் சுமார் 1,750 பேர் வரை நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் பெற்று விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 8,000 நபர்கள் யார், அவர்களது நிலை என்ன, அவர்கள் தற்போது எங்கு உள்ளார்கள் என்று தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.
“தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடியல் பிறக்கும் என்று தி.மு.க. அளித்த வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்கள், நாள்தோறும் விடிந்தால் என்ன தகாத சம்பவங்கள் தங்களைச் சுற்றி நடக்குமோ என்ற பாதுகாப்பற்ற நிலையில், பீதியில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.” தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மேலும் சீரழியாமல், மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு இந்த ஆட்சியாளர்களுக்கு உண்டு என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
நாட்டில் பெருகி வரும் குற்றச் சம்பவங்களை ஒடுக்குவதும், கிரிமினல்களை அடக்குவதும், மக்களை சுதந்திரமாக பயமின்றி இயங்க வைப்பதும், காவல் துறையை தன் கையில் வைத்திருக்கும் முதல்வரின் தலையாய கடமையாகும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…