ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியமாக நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பிரதான கட்சிகள் வெகு தீவிரமாக தயாராகி வருகின்றன. அதே போல ஒரு கட்சியினர் மாற்று கட்சியினரை விமர்சிக்கவும் தயங்கவில்லை. அப்படி தான் ஆளும் கட்சி , எதிர்க்கட்சியினர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வருகின்றனர்.
நியாமான முறையில் தேர்தல் : தற்போது அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாமான முறையில் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .
பூத் சிலீப் : மேலும், அதில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர்கள் முறையாக இல்லை. இறந்தவர்களின் பெயரும் அதில் இருக்கிறது. அதே போல இரட்டை பதிவும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. எனவும், இதனால், கள்ளஓட்டு பதிவு செய்யும் அபாயம் இருக்கிறது. எனவே, பழைய பூத் சிலீப் முறைப்படி சரிபார்த்து தேர்தல் நடத்த வேண்டாம். வாக்காளர் அடையாள அட்டை கொண்டு சரிபார்த்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
நாளை விசாரணை : அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தாக்கல் செய்த இந்த வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி டி.ராஜா தலைமையில் உள்ள அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது .
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…