#Breaking : பூத் சிலீப் வேண்டாம்… வாக்காளர் அட்டை போதும்.! உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு.! 

Default Image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியமாக நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக பிரதான கட்சிகள் வெகு தீவிரமாக தயாராகி வருகின்றன. அதே போல ஒரு கட்சியினர் மாற்று கட்சியினரை விமர்சிக்கவும் தயங்கவில்லை. அப்படி தான் ஆளும் கட்சி , எதிர்க்கட்சியினர் மாற்றி மாற்றி குற்றம் சாட்டி வருகின்றனர்.

நியாமான முறையில் தேர்தல் : தற்போது அதிமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாமான முறையில் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது .

 பூத் சிலீப்  : மேலும், அதில், ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர்கள் முறையாக இல்லை. இறந்தவர்களின் பெயரும் அதில் இருக்கிறது. அதே போல இரட்டை பதிவும் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது. எனவும், இதனால், கள்ளஓட்டு பதிவு செய்யும் அபாயம் இருக்கிறது. எனவே,  பழைய பூத் சிலீப் முறைப்படி சரிபார்த்து தேர்தல் நடத்த வேண்டாம். வாக்காளர் அடையாள அட்டை கொண்டு சரிபார்த்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

நாளை விசாரணை : அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தாக்கல் செய்த இந்த வழக்கு நாளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி டி.ராஜா தலைமையில் உள்ள அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்