பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய விவகாரம்! சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும் – ராமதாஸ்

Published by
Venu

 சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும்  என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம்  சுந்தராபுரம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு  செய்ததால்  அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் என்பவர் போத்தனூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.இந்த சம்பவத்திற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் சிலை மீது சில நச்சுக்கிருமிகள் காவி சாயத்தை ஊற்றி அவமதிப்பு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இதற்கு காரணமான விஷமிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தந்தை பெரியாரின் சிலைகள் மட்டும் தொடர்ந்து அவமதிக்கப்படுகிறது என்றால், அவரது கொள்கைகள் தமிழகத்தில் கடந்த சில காலமாக ஊடுருவியுள்ள நச்சுக்கிருமிகள், விஷப்பாம்புகளை அச்சமடையச் செய்துள்ளன; அதன்விளைவு தான் இது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கொள்கை அடிப்படையில் எதிர்க்க துணிவில்லாத கொரோனாவை விட மோசமான இந்த நச்சுக்கிருமிகள் மிகவும் ஆபத்தானவர்கள்; சமுதாயத்தில் நஞ்சை பரப்புபவர்கள். அவர்களிடமிருந்து நமது பிள்ளைகளைக் காப்பதும், விழிப்புணர்வூட்டுவதும் தான் நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.கொள்கை அடிப்படையில் எதிர்க்க முடியாத ஒருவரின் சிலையை அவமதிப்பதும், சாயத்தை ஊற்றுவதும் கோழைத்தனமான செயல்கள். கடந்த காலங்களில் இத்தகைய செயல்களால் எதையும் சாதிக்க முடியவில்லை; இனியும் சாதிக்க முடியாது என்பதை கோழைகள் உணர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்!தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்!

தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்துக் கூற மனமில்லையா? முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன்!

சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு…

9 minutes ago
பாஜகவுடன் கூட்டணி “ரொம்ப வருத்தம்”..! கதறி அழுத அதிமுக நிர்வாகி..!பாஜகவுடன் கூட்டணி “ரொம்ப வருத்தம்”..! கதறி அழுத அதிமுக நிர்வாகி..!

பாஜகவுடன் கூட்டணி “ரொம்ப வருத்தம்”..! கதறி அழுத அதிமுக நிர்வாகி..!

சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…

46 minutes ago
இதுதான் நட்பு! சட்டையை விட உயிர் முக்கியம்., மின்னல் வேகத்தில் பறந்த ‘அஜ்மல்’ ஆம்புலன்ஸ்!இதுதான் நட்பு! சட்டையை விட உயிர் முக்கியம்., மின்னல் வேகத்தில் பறந்த ‘அஜ்மல்’ ஆம்புலன்ஸ்!

இதுதான் நட்பு! சட்டையை விட உயிர் முக்கியம்., மின்னல் வேகத்தில் பறந்த ‘அஜ்மல்’ ஆம்புலன்ஸ்!

திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும்…

3 hours ago

திமுகவை ஃபாலோ செய்யும் விஜய்? சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.!

சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்…

4 hours ago

விராட் கோலிக்கு இதய பிரச்சனையா? சஞ்சு சாம்சன் செயலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.! வைரலாகும் வீடியோ…

ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…

4 hours ago

பாஜகவுடன் கூட்டணி., அதிமுகவில் இருந்து விலகுகிறேனா.? ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி!

சென்னை : கடந்த வாரம் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில்…

4 hours ago