தமிழகத்தில் இன்று 7-ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸின் தீவிரத்தை ஒழிக்கும் விதமாக தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்துபவர்களை ஊக்குவிப்பதற்காக வாரம்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தடுப்பூசி செலுத்தும் முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அதன் பின்பதாக செப்டம்பர் 19-ஆம் தேதி இரண்டாம் தடுப்பூசி முகாமும், செப்டம்பர் 26-ஆம் தேதி மூன்றாம் தடுப்பூசி முகாமும், கடந்த அக்டோபர் 3 -ஆம் தேதி நான்காம் தடுப்பூசி முகாமும், 10-ஆம் தேதி 5 ஆம் தடுப்பூசி முகாமும் நடத்தப்பட்ட நிலையில் மது பிரியர்களுக்காக இறைச்சி சாப்பிடுபவர்களுக்கும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம் கடந்த வாரம் முதல் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது.
இதனால் கடந்த 23 ஆம் தேதி சனிக்கிழமை ஆறாம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதிலும் ஏழாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி முகாமிற்காக தமிழகம் முழுவதிலும் மூவாயிரத்துக்கும் அதிகமான மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடை பெறக் கூடிய இந்த முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…