மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கடிதம் எழுதிய 3ம் வகுப்பு மாணவன்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • திருப்பூர் 3-ம் வகுப்பு மாணவன் மாவட்ட ஆட்சியருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்ததால் நன்றி கடிதம் எழுதியுள்ளார். இதனை மாவட்ட ஆட்சியர் இணையத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சிக்கினாபுரத்தில் அரசு நடுநிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அப்பள்ளியில் படிக்கும் 3-ம் வகுப்பு மாணவன் தரணேஷ், மாவட்ட ஆட்சியருக்கு நன்றி கடிதம் ஒன்று எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அன்புள்ள மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு நானும் எனது நண்பர்களும் பள்ளிக்கு நடந்துதான் செல்வோம் என்றும் எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு சுமார் 10 கிலோ மீட்டர் வரை நடந்து செல்ல இருப்பதால் கஷ்டமாக இருக்கிறது. அதுவும் மழைக் காலங்களில் பள்ளிக்கு செல்லும் வழியில் ஓடைமுழுவதும் தண்ணீர் செல்லும். அந்த ஓடையை தாண்டித்தான் நாங்கள் பள்ளிக்கு செல்ல முடியும் என்று கூறிருந்தார். மேலும் எங்கள் பகுதியில் இருக்கும் சகோதர்கள் சமூக வலைதளத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பணிமனை மேளாலர் தாராபுரம் அவர்கள் இன்னும் 10 நாட்களில் பள்ளிக்கு செல்ல பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த செய்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பின்னர் பேருந்து வசதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த தங்களுக்கு எனது பள்ளி சார்பாகவும், மாணவர்கள் சார்பாகவும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் தங்களுக்கு நேரம் இருந்தால் பேருந்து துவக்க விழாவிற்கு வருகை தரவேண்டும் என்று குறிப்பிட்டார். பள்ளி மாணவனின் கடிதத்தை பார்த்த மாவட்ட ஆட்சியர் விஜயகார்திகேயன் ட்விட்டர் பக்கத்துல் மாணவனுக்கும், அவரது நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறி மாணவனின் கடிதத்துடன் பதிவிட்டுள்ளார். மாணவனின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

என் பாடலுக்கு ரூ.5 கோடி வேணும்! குட் பேட் அக்லி பட நிறுவனத்திற்கு செக் வைத்த இளையராஜா!

சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா பொறுத்தவரையில் தான் இசையமைத்த பாடல்கள் அனுமதி இல்லாமல் பயன்படுத்தினால் உடனடியாகவே அந்த பாடல்களை நீக்க கோரி…

2 hours ago

எங்கும் இந்தி., எதிலும் இந்தி! இனி எடப்பாடியார் பெயர் கூட இந்தியில் தான்.. சு.வெங்கடேசன் காட்டம்!

சென்னை : இந்தி மொழி திணிப்பு மீதான குற்றசாட்டு என்பது நாள்தோறும் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து கொண்டே செல்கிறது. அதற்கேற்றாற்…

2 hours ago

இறந்தவங்கள வச்சு பாடலை உருவாக்காதீங்க..இருக்குறவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க! ஹாரிஷ் ஜெயராஜ் ஆதங்கம்!

சென்னை : இன்றயை காலத்தில் AI தொழில்நுட்பம் என்பது பெரிய அளவில் வளர்த்துக்கொண்டு இருக்கும் நிலையில்,  சினிமாவிலும் அதனை அதிகமாக பயன்படுத்த…

3 hours ago

நெல்லையில் பரபரப்பு., 8ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு! சக மாணவன் வெறிச்செயல்!

திருநெல்வேலி : திருநெல்வேலி , பாளையம்கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இன்று 8ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட…

3 hours ago

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை  கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…

4 hours ago

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

4 hours ago