கன்னியாகுமரியில் கொரோனா வார்டில் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மரியஜான். இவருக்கு வயது 66 .இவர் கேரளாவில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில் சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு திரும்பியுள்ளார். இதனால் கொரோனா அச்சம் காரணமாக இவர் வீட்டில் தனிபடுத்தப்பட்டிருந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து இருமல், காய்ச்சல் இருந்ததால் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டார். இன்று திடீரென உயிரிழந்தார். இவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை.இவரது மகன் சவூதி அரேபியாவில் பணியாற்றி கடந்த 13-ம் தேதி ஊருக்கு திரும்பிய நிலையில் அவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இவர் இறந்த அதே வார்டில் 2 வயது ஆண் குழந்தை, 24 வயது இளைஞர் உயிரிழந்துள்ளனர்.ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
1.2 வயது குழந்தை பிறவி எலும்புநோய் காரணமாகவும்,
2.66 வயது மீனவர் சிறுநீரக நோய் காரணமாகவும்,
3.24 வயது இளைஞர் நிம்மோனியா தொற்றினால் குருதியில் ஏற்பட்ட நச்சுதன்மை காரணமாகவும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்களது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…