ஏரல் அருகே தனியாக வசித்து வந்த 76 மூதாட்டியிடம் 14 பவுன் நகை பறிக்கப்பட்டுள்ளது.
ஏரல் அருகே பண்டார விளை பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை இவருடைய மனைவி முத்துக்கிளி 76 வயதான இவருக்கு 6 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளார்கள் இவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர் . செல்லத்துரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முத்துக்கிளி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
மேலும் இதனைநோக்கமிட்ட மர்ம நபர் நேற்று முன்தினம் மதியம் முத்துக்கிளி வீட்டிற்குள் சென்று கதவை தட்டினர் உடனே முத்துக்கிளி கதவை திறந்து வெளியே வந்தார் .அப்போது அங்கு நின்ற மர்ம நபர் தனது உடலை போர்வையை வைத்து போர்த்தி இருந்தார்.
மேலும் அவர் திடீரென முத்துக்கிளி கழுத்தில் அணிந்திருக்கும் மொத்தம் 20 பவுண்ட் மதிப்பிலான 2 தங்க சங்கிலிகளை பிடித்து இழுத்துள்ளார், உடனே சுதாரித்துக்கொண்ட முத்துக்கிளி நகைகளை கைகளால் இருக்கமாக பிடித்து திருடன் திருடன் என்று கூச்ச லிட்டுள்ளார் , மேலும் அப்போது அவரது இரண்டு நகைகள் ஒரு நகை மட்டும் அறுந்து துண்டானது மேலும் அதன் ஒரு பகுதியான 6 பவுன் நகை மட்டும் முத்துக்கிளி கையில் இருந்தது.
மற்றொரு 8 பவுன் தங்கச் சங்கிலியையும் அறுந்த ஒரு பகுதியான 6 பவுன் நகையும் பறித்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடினார் , அவரை அக்கம் பக்கத்தினர் விரட்டிச் சென்று பிடிக்கமுடியவில்லை இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர், மேலும் ஏரல் அருகே பட்டப்பகலில் மூதாட்டி நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…