தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் ஒவ்வொரு தேர்வுக்கு இடையிலும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படும். தேர்வு எப்போது நடத்தப்படும் என மே 3 ஆம் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்பட்டு, தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் எனவும் கூறியுள்ளார். இதனிடையே ஊரடங்கு நீட்டிப்பால், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனியார் பள்ளிகளை பொறுத்தவரை கட்டாய வசூல் செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் தமிழகத்திலும் அதற்கான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் மாணவர்களுக்கு யூடியூப், பொதிகை சேனல் மூலமாக பாடம் கற்றுக்கொள்ள வழி செய்யப்படும் என்றும் ஒருநாள் விட்டு ஒருநாள் தேர்வு எப்படி எழுதலாம் என்பது குறித்து முதல்வரிடம் ஒப்புதல் பெற்று, அந்தப் பணிகளை நிறைவேற்றுவோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…