அது அவரு கருத்து ..அதை என்னிடம் கேட்க வேண்டாம் – தமிழிசை பேட்டி ..!

Default Image

தமிழிசை: நடைபெற்ற மக்களவை தேர்தலில், தமிழக மக்களவை தொகுதியான கோவையில் போட்டியிட்ட மாநில பாஜக தலைவரான அண்ணாமலை 2-வது இடம் பிடித்து தோல்வியை தழுவினார். மேலும், தற்போது அவர் அந்த தோல்விக்கு அதிமுக தான் காரணம் என செய்தியாளர்களிடம் பேசி வருகிறார்.

அதே நேரம் சென்னையில் பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அண்ணாமலை கூறிய கருத்துக்களை குறித்து பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, “அண்ணாமலை தம்பி கூறிய கருத்துக்களை குறித்து என்னிடம் கேட்காதீர்கள். அது அவரது கருத்து, மேலும் இதை வைத்து அண்ணாமலைக்கும், தமிழிசைக்கு சண்டை என்று தவறாக எண்ண கூடாது.

கட்சிக்குள் நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கிறோம். அவர் அவர்கள் கருத்தை சொல்வதற்கு சுதந்திரம் இங்கு உள்ளது. அதனால் அவரது கருத்தை பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்”, என அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்