திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்ன மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பரிசன் வட்டம் கிராமம். இந்த கிராமத்தில் யார் ஆதரவின்றி வசித்துவரும் 90 வயது மூதாட்டி சென்னி. இவர் இந்திராகாந்தி முதியோர் ஓய்வூதிய தேசிய திட்டத்தின் முலம் மாதம் 1000 ரூபாய் பெற்று வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டது. இதற்காக இந்த மூதாட்டி தள்ளாத வயதிலும் வேலூர் ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் என அலைந்தது திரிந்துள்ளர். எனினும் அதிகாரிகள் ஓய்வூதியம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன்பின்னர் இதுப்பற்றிய விவரம் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியது. இதையறிந்த திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களை கொண்டு தீவிர விசாரணை நடத்தினார். இதில், உண்மையில் அந்த முதாட்டி உதவித்தொகை பெற தகுதியானவர் என்பது தெரிந்து வட்டாட்சியர் அனந்த கிருஷ்ணன் நேரில் சென்று மூதாட்டிக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார். ஊடகத்தில் வந்த செய்தியை உரிய விசாரணை செய்து நேரடியாக சென்று அரசின் உதவித்தொகை கிடைக்க செய்த ஒருசில அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பது பாராட்டுதலுக்குரியது என்று சமூகசேவகர்கள் கருதுகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…