P Shanmugam CPM - Suba Veerapandiyan [File Image]
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு தந்தை பெரியார் விருதும், ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பாடுபடுவோருக்கு டாக்டர் அம்பேத்கர் விருதும் வழங்கி கௌரவித்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டும், 2023ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, டாக்டர் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகை கூடுதலாக ரூ.250 வழங்க உத்தரவு.!
அதன்படி தந்தை பெரியார் விருதுக்காக சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் சுப வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், 2023ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருது அறிவிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தங்கப்பதக்கம் வழங்கி கௌரவிக்க உள்ளார். மேலும், விருது பரிசு தொகையான 5 லட்சம் ரூபாயையும் வழங்க உள்ளார்.
சுப வீரபாண்டியன், பெரியாரின் கொள்கைகளை சமூகத்தில் பலமாக தொடர்ந்து எடுத்துரைத்து வருகிறார். இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார். 54 நூல்களை எழுதி உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பி.சண்முகம், கடந்த 32 ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் சங்க தலைவராக பொறுப்பிலிருந்து வருகிறார். மலைவாழ் மக்களின் நலனுக்காக பாடுபட்டு உள்ளார். குறிப்பாக தர்மபுரி மாவட்டம் வாசாத்தி கிராமத்தில் மலைவாழ் மக்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தி நீதி பெற்று தந்ததில் பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…
மதுபானி : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…