விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வைத்ததற்கு நன்றி – ஸ்டாலினை சந்தித்த நிர்வாகிகள்

Published by
Venu

விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஸ்டாலினை சந்தித்து, விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார்.முதலமைச்சர் அறிவித்தவாறு வங்கிகளில் நிலுவையில் உள்ள 16,43,347 விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்து அரசு அரசாணை வெளியிட்டது.  பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15  நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில்,  கூட்டுறவுக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சொன்ன போது ரத்து செய்யாத பழனிசாமி  ரத்து செய்ய என்ன காரணம்? என்று கேள்வி எழுப்பினார். திமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்வோம் என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். அதனால் வேறு வழியில்லாமல் ரத்து செய்துள்ளார் பழனிசாமி .இந்த ஸ்டாலின் என்ன சொல்கிறானோ அதை பழனிசாமி அப்படியே செய்து கொண்டு வருகிறார் என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று  அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் சந்தித்து, ’திமுக அரசு அமைந்ததும் விவசாயிகள் கடன்ரத்து’ என அறிவித்து, விவசாயிகளின் கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

Published by
Venu
Tags: #MKStalin

Recent Posts

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை! 

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

4 minutes ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

2 hours ago

ஏப்ரல் 25 மற்றும் 26இல் துணைவேந்தர்கள் மாநாடு – ஆளுநர் மாளிகை அறிக்கை.!

உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…

2 hours ago

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…

2 hours ago

சென்னை அவ்வளவுதான்..கோப்பை ஆர்சிபிக்கு தான்..அந்தர் பல்டி அடித்த அம்பதி ராயுடு!

சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…

2 hours ago

மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் – துணை முதல்வர் அறிவிப்பு!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…

4 hours ago