மதுரையின் தொழில் வளர்ச்சிக்கு தோள்கொடுத்த முதல்வருக்கு நன்றி – சு.வெங்கடேசன் எம்.பி

Published by
லீனா

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்ட சு.வெங்கடேசன் எம்.பி. 

இன்று காலை  மதுரையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் முதல்வர் அவர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோரிக்கைகளில் முக்கியமானது புதிய தொழில்நுட்ப பூங்கா மதுரையில் அமைக்கப்பட வேண்டும் என்பது. இதற்காக ஜனவரி 19 ஆம் தேதி தலைமை செயலகத்தில் மாண்புமிகு தமிழக முதல்வரை நானும் எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்களும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தோம்.

இன்றைய தினம் மதுரையில் நடைபெற்ற “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” தெற்கு மண்டல மாநாட்டில் விழா பேருரையாற்றிய மாண்புமிகு முதல்வர் அவர்கள் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து புதிய டைடல் பார்க் அமைக்கப்படும். மாட்டுத்தாவணி பகுதியில் இரண்டு கட்டமாக 10 ஏக்கரில் பூங்கா அமையும். முதல் கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என்று அறிவித்துள்ளார்.

மதுரை மற்றும் தென்மாவட்ட வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்காற்றும் அறிவிப்பு இது. மதுரை மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு உருவம் கொடுத்துள்ள தமிழக முதல்வருக்கு மதுரை மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தகவல்தொழில்நுட்ப பூங்கா தென் தமிழகத்தில் தகவல்தொழில் நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்ட பாய்ச்சலுக்கான வித்து.

இந்த ஆண்டு ஜூன்8 ஆம் தேதி மதுரை வந்து கொட்டாம்பட்டியில் தங்கிய முதல்வரிடம் “மதுரையில் சிறு, குறு தொழில் கூட்டமைப்பின் கான்கிளேவ்” நடத்தவேண்டும் என்றும் கோரியிருந்தேன். ஏற்றுக்கொண்ட முதல்வர் அவர்கள் இன்று அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு “தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கான” அறிவிப்பை வெளியிட்டுயிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்த்துகிறோம் முதல்வரே

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

3 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

21 hours ago