தளபதி சொல்வதையெல்லாம் செய்யும் பழனிசாமிக்கு நன்றி…! கனிமொழி ட்வீட்…!

Default Image

அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி. தளபதி சொல்வதையெல்லாம் செய்து முடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள் என டுவிட் செய்துள்ளார்.

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் ஐந்தாவது நாள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ 12,110 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த மாதம், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

இதனை சுட்டிக்காட்டி, திமுக எம்பி கனிமொழி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இதனை விமர்சிக்கும் விதமாக, அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி. தளபதி சொல்வதையெல்லாம் செய்து முடிக்கும் பழனிசாமிக்கு நன்றி என்றும் வாழ்த்துக்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Black paint DMK
sajjan kumar
Match abandoned due to rain
Wasim Akram
GK Mani home wedding ceremony - Jason sanjay - Vijay sethupathi - Tamilnadu CM MK Stalin
tvk vijay ntk seeman