சனாதன சக்திகளுக்கு சவுக்கடிக் கொடுத்துள்ள மு.க.ஸ்டாலினுக்கு நன்றி – திருமாவளவன்

Default Image

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த நன்றி என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் , பெண்கள் குறித்தும், மதம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில், அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையில், நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் பகைமையை உருவாக்குதல், மத உணர்வை புண்படுத்தும் சொற்களை சொல்லுதல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தொல்.திருமாவளவன் பேசியது குறித்து சமூக வலைதளங்களில் பரப்பி வன்முறையை தூண்டும் மதவெறியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, திருமாவளவன் மீதே வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகிய சமூகநீதிக் காவலர்களின் கொள்கை வாரிசாய் இன்று சனாதன சக்திகளுக்கு சவுக்கடிக் கொடுத்துள்ள அண்ணன் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எமது நெஞ்சம் நிறைந்த நன்றி என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்