தனக்கு ஆதரவாக குரல் எழுப்பிய கமலுக்கு மிக்க நன்றி – நடிகர் சூர்யா அறிக்கை!

Default Image

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தான் பேசிய கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய மக்கள் நீதி மையம் தலைவரான கலஹாசனுக்கும் , அவரது அமைப்பிற்கும் நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை விடுத்துள்ளார்.

கடந்த திங்கள் கிழமை அகரம் பவுண்டேசன் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அரசின் புதிய கல்விக் கொளகைக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று பேசி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்தனர்.

 

மக்கள் நீதி மையம் மையம் தலைவர் கமலஹாசனும் வெளிப்படையாக ஆதரவு குடுத்தார். அதற்க்கு பதிலாக இன்று சூர்யா தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் என் போன்ற  திரையுலக கலைஞர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தங்களது ஆதரவு தொடர்ந்து கல்வி பணியில் தீர்க்கமாக செயலாற்ற உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen
narendra modi HAPPY