முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரபலங்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் கொரோனா நிவாரண நிதிக்காக தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி பல்வேறு பிரபலங்கள் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தங்களால் இயன்ற உதவி செய்துள்ளனர்.
இதுவரையில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக ரூ.181 கோடி பெறப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனமுவந்து நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இந்த நிவாரண நிதியிலிருந்து ஆக்சிஜன் கண்டெய்னர்களை வாங்க முதற்கட்டமாக ரூ.50 கோடியம், ஆர்.டி.பி.சி.ஆர் ஹிட்களை வாங்க ரூ.50 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…