அதிமுகவில் தங்க தமிழ்ச்செல்வன் ….!நானே அதிமுகவிற்கு அனுப்பி வைக்கிறேன் …!டி.டி.வி.தினகரன் உறுதி

Published by
Venu

அதிமுகவிற்கு  தங்க தமிழ்ச்செல்வன் அனுப்பிவைப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா அதிமுக பொதுச் செயலாளராக பதவி வகித்த நிலையில் அவர் மரணமடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் சசிகலாவின் ஆதிக்கம் தொடங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியிலிருந்து, விலகுமாறு நெருக்கடி வந்தது.

பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை இழந்த நிலையில் 2017 பிப்ரவரி 8ம் தேதி, மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதி முன்பாக சென்று தியானத்தில் இருந்தார்.

Image result for ttv palanisamy

இதன் பின்னர் அதிமுகவில் சிலர் பன்னீர்செல்வம் தலைமையில் தனி அணியாக பிரிந்து சென்றனர்.பன்னீர்செல்வம் அணி சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் இணைந்து கொண்டது.

பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .

இதனால் தினகரன் தனக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் பொதுச்செயலாளர் சசிகலா ஆவார்.

இந்நிலையில் தினகரன் தற்போது ஆர்.கே.நகர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினராக உள்ளார்.தினகரன் அணியில் அவ்வப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கருத்து கூறி வருகின்றார்.

இதேபோல் சமீபத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைதேர்தல்களில் அதிமுக வெற்றிபெற்றால் நாங்கள்(தினகரன் அணி) அதிமுகவுடன் இணையத் தயார். நாங்கள் வெற்றி பெற்றால் அவர்கள் இணையத் தயாரா? என்று கேள்வி எழுப்பினார்.

இவரது பேச்சுக்கு  செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் கூறியுள்ளார்.தூத்துக்குடியில் அவர் கூறுகையில், தினகரனின் ஆதரவாளரான தங்கதமிழ்ச்செல்வன் அதிமுகவில் சேர தூது விட்டுக் கொண்டிருக்கிறார்.சரியான பதில் அதிமுகவில் இருந்து வராததால், தங்கதமிழ்செல்வன் சரியான வழியை தேடிக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.மேலும் தங்கத்தமிழ்செல்வன் எங்களுடன் விரைவில் வந்து விடுவார்  என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

இந்நிலையில்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்,அவரோட கோவில்பட்டி தொகுதிக்குள்ள அமைச்சர் கடம்பூர் ராஜூ ஒரேயொரு நாள் தனியா போய்ட்டு, நல்லபடியா திரும்பி வந்துட்டாருன்னா தங்கத்தை(அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் ) நானே அவங்களோடு அனுப்பி வைக்கிறேன்  என்று சவால் விடுத்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago