எம்.பி. பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு !வெற்றிவேல் தகவல்

Default Image

எம்.பி. பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார் என்று அமமுக மாவட்ட செயலாளர்  வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக .
இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு   டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் தினகரன் கட்சியில் இருந்து செந்தில்பாலாஜி திமுகவிற்கு சென்றார்.இது தினகரன் கட்சிக்கு பின்னடைவாக இருந்தாலும் அதை சமாளித்து மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட்டது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
ஆனால் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை.
இந்த நிலையில் சமீப காலமாக தினகரன் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் வேறு கட்சிக்கு சென்று வருகின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் தினகரன் கட்சியின் முக்கிய நிர்வாகி செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்றார், நெல்லை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளராக போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.மேலும் பலர் தொடர்ச்சியாக வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
இந்த வகையில் அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார்.டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? என்றும்  என்னை பிடிக்காவிட்டால் அமமுகவில் இருந்து நீக்குங்கள் என்றும் பேசினார்.இதற்கு தினகரன் மற்றும் தங்க தமிழ்செல்வன் இருவரும் மாறி மாறி கருத்து கூறிவருகின்றனர்.இதனால் அமமுக கட்சியினர் இடையே பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டு வருகின்றது.
தற்போது அமமுக மாவட்ட செயலாளர்  வெற்றிவேல் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், எம்.பி. பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார்.
தங்க தமிழ்செல்வன் மீது நடவடிக்கை போய்க் கொண்டிருக்கிறது.இவ்வளவு நாள் தங்க தமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு சொல்லாமல் இருந்தது ஏன்?  என்று கேள்வி எழுப்பினார்.
தங்க தமிழ்ச்செல்வனை பின்னால் இருந்து யாரோ இயக்குகிறார்கள்.எம்எல்ஏ என்பது நிரந்தரமாக எழுதி கொடுக்கப்பட்ட பதவி அல்ல என்று தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ooty kodaikanal chennai hc
Venkatesh Iyer - rahane
Tamilnadu CM MK Stalin - TN Budget 2025 Rupees symbol
world cup 2027
TN Budget - TN Govt
train hijack pakistan