‘போர் யானை ..வாகை மலர்’! தவெக கொடியை அறிமுகம் செய்தார் விஜய்..!

TVK Flag

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள், விஜய் ரசிகர்கள் திரளாகப் பங்கேற்றனர். விஜயின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் சோபா சந்திரசேகர் இருவரும் கலந்து கொண்டனர்.

அந்த கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் இருந்தது. நடுவில் வாகைப்பூவும் அதனை சுற்றி 28 நட்சதரிங்களும் வட்ட வடிவில் அதனைகி சுற்றி இருந்தது. அந்த வாகைப் பூவின் இரு பக்கத்திலும் போர் யானைகள் என விஜய் கட்சியின் கொடி தயார் செய்யப்பட்டிருக்கிறது. விழாவின் தொடக்கத்தில் கட்சியின் பொதுச் செயலாளரான  N.ஆனந்த் பேசி விழாவைத் தொடங்கி வைத்தார்.

அவரைத் தொடர்ந்து தலைவர் விஜய் பேசுகையில், கட்சியின் உறுதி மொழி எல்லோராலும் எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்சியின் கொடியை மேடையில் விஜய் அறிமுகம் செய்து வைத்தார்.  அதன் பின் தவெக கட்சியின் பாடல் கிராஃபிக் காட்சிகளைக் கொண்ட வீடியோவுடன் வெளியிடப்பட்டது.

அந்தப் பாடலில் சங்ககாலத்தில் போர் நடப்பது போலவும், ஜல்லிக்கட்டு காளை, புலி போன்ற விலங்குகளும் இடம் பெற்றுள்ளது. மேலும், ‘மூன்றெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது’ எனும் வரிகளைக் கொண்ட அந்த பாடல் தவெக கட்சியின் யூட்யூப் சேனலில் வெளியாகி அதிக பார்வையாளர்களை கடந்து வருகிறது. இறுதியாக, கட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள 40 அடிக் கொடிக் கம்பத்தில் தலைவர் விஜய், கட்சிக் கொடியை ஏற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்