காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தாலுகா பகுதிக்கு உட்பட்ட அனுமந்தபுரம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த குண்டுகள் பாதி வெடித்தும் பாதி வெடிக்காமலும் கிடைக்கப் பெற்று உள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இது குறித்து விசாரிக்கையில், குறிப்பிட்ட அனுமந்தபுரம் ஏரிப்பகுதி பகுதியில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளும் பகுதியாகும் இங்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இதுபோல பயிற்சி நடைபெறும். அந்த பயிற்சி நடைபெற்று முடிந்த பின்னர், இது மாதிரியான வெடிகுண்டுகள் வெடிக்கும் நிலையிலும், வெடிக்காமலும் சிதறிக்கிடக்கும் இதனை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் எடுத்து அருகில் உள்ள இரும்பு கடையில் கொடுத்து காசாக்கி விடுகின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
அப்படிதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அனுமந்தபுரம் ஏரி பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் அப்பால் உள்ள காஞ்சிபுரம் பகுதியில் உள்ள இரும்பு கடையில் ஒரு குண்டு வெடித்து இருவர் பலியானார்கள். என கூறப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர், இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் பயிற்சி எடுத்தது போக, மீதி குண்டுகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே போட்டு விட்டு சென்று விட்டனர்களாம். அந்த குண்டுகள் தான் தற்போது கிடைக்கின்றன என தகவல் வெளியாகி உள்ளது. இப்படி அப்புறப்படுத்தாமல் வெடிகுண்டுகள் இருப்பதால் அப்பகுதி மக்கள் ஏரிக்கரையோரம் கால்நடைகளை மேய்க்கவும், அந்த பகுதிக்கு செல்லவும் தயக்கம் காட்டுகின்றனர் என கூறப்படுகிறது,
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…