கழுகுமலை அருகே பயங்கர தீ விபத்து.!

Default Image

நூற்பாலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து 10 லட்சம் மதிப்பிலான பஞ்சு முட்டைகள் சேதம் அடைந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம் பஞ்சாயத்து சி.ஆர் காலனியை சேர்ந்தவர் சிவன் இவருடைய மனைவி கலைவாணி இவருக்கு சொந்த ஊர் நூற்பாலையில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த நூற்பாலையில் 19 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது நூற்பாலையில் உள்ள பஞ்சு மூட்டைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் கூச்சலிட்டு ஓடினர் .

மேலும் சிறிது நேரத்தில் நூற்பாலை முழுவதும் தீ மளமளவென பரவியது மேலும் இதுகுறித்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனே தீயணைப்பு அலுவலர் முத்து என்பவர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர் மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் பாளையில் உள்ள சுவரை இடித்து அகற்றி பஞ்சு மூட்டைகளை அகற்றப்பட்டனர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

மேலும் தீ விபத்தில் நூற்பாலையில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதம் அடைந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இது குறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்