street dogs [File Image]
சென்னை : தமிழ்நாட்டில் தெருநாய்க்கடி சம்பவங்கள் என்பது சமீப ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருகின்றன, உதாரணமாக சொல்லவேண்டும் என்றால், இந்த ஆண்டு (2025 ஏப்ரல் 1) நிலவரப்படி, இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி முதல் மார்ச் வரை) மட்டும் 1.24 லட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ள தாக ஊடகங்கள் செய்திகளை வெளியீட்டு இருக்கிறது.
இதனையடுத்து, இந்த மாதிரியான சம்பவங்களுக்கு தீர்வு வேண்டும் அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டது மட்டுமில்லாமல் ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 25 லட்சம் பேர் தெருநாய்களால் கடிபட்டுள்ளனர். 2024-ல் மட்டும் 4.25 லட்சம் பேர் கடிபட்டு, 82 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர். ஆபத்தான நிலையில் உள்ள நாய்களை அடையாளம் கண்டு, மனிதாபிமான முறையில் கருணைக்கொலை செய்ய வேண்டும்.
இது மிருகவதை தடுப்புச் சட்டம் 1960-ஐ மீறுவதாக இருக்கலாம் என செய்தியாளர் கேள்வி எழுப்ப அதற்கு, “மக்களின் உயிரை விட எதுவும் முக்கியமில்லை. சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அதை அரசு செய்ய வேண்டும் எனவும் அன்புமணி பதில் அளித்தார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் “தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஊட்டி, மதுரை போன்ற இடங்களில் செயல்படும் நடமாடும் ஸ்டெரிலைசேஷன் (mobile sterilization) திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும்.
ஆபத்து இல்லாத நாய்களை தத்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும் எனவும் , மக்கள், தொண்டு நிறுவனங்களை இணைத்து தெருநாய்க்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு நாளும் நாய்க்கடி நிகழ்வு அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தீர்வு காண்பது அவசரத் தேவை” எனவும் அன்புமணி பேசினார்.
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…