தமிழ்நாடு அரசின் 2024-2025 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தின் நிதி அமைச்சரான தங்கம் தென்னரசு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இன்று பேரவையில் பட்ஜெட் உரையாற்றிய அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், தமிழ்நாட்டில் புதிதாக 10,000 மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் கூறியதாவது, 1989ம் ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் தொலைநோக்கு சிந்தனையுடன் விதைக்கப்பட்ட சுய உதவி குழு திட்டம் இன்று நாடெங்கும் கோடிக்கணக்கான மகளிர் வாழ்க்கையில் ஒளியேற்றும் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
சென்னைக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு தெரியுமா..? மெட்ரோ.. வடசென்னை.. பூந்தமல்லி..
மகளிரிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து, அவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றி சமூகத்தில் பெண்களுக்கு உரிய பங்களிப்பினை வழங்கும் நோக்கில் அவர்களின் வளர்ச்சிக்கும், திறன் மேம்பாட்டிற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
அந்தவகையில் இதுவரை சுய உதவி குழு இயக்கத்தில் இணைந்திடாத மகளிர் மற்றும் விளிம்புநிலை வாழ் உறுப்பினர்களை கொண்டு 10,000 புதிய சுய உதவி குழுக்கள் வரும் நிதியாண்டில் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். மேலும், வரும் நிதியாண்டில் ரூ.35,000 கோடி அளவிற்கு வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, வேளாண்மை, சிறு குறு நிறுவனங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் வங்கிகளுக்கு ரூ.8 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், இது கடந்த ஆண்டை விட 14% அதிகம் எனவும் கூறினார்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…