தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி! வதந்திகளை நம்ப வேண்டாம்!

Default Image

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சில நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் திடீரென விஜயகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, விஜயகாந்தின் உடல்நலம் குறித்து தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘விஜயகாந்த் 15 நாட்கள் கழித்து 2 ஆம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார். வதந்திகளை நம்ப வேண்டாம். ‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்