மத்திய ஆயுஸ் அமைச்சக செயலருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம்.!

Default Image

இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என சொன்ன மத்திய ஆயுஸ் அமைச்சக செயலருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் யோகா நேச்சுரோபதி மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 37 பேர் உட்பட நாடு முழுவதும் 350-கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசியதால், தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும்போது கோரியுள்ளனர்.

ஆனால் தனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்றும் இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் முடியாதவர்கள் வெளியேறலாம் இருந்து என கொள்ளவும் இந்தி கூறிய மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜாவுக்கு கண்டனம் இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகி கொள்ளலாம்.

இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என கூறிய  மத்திய ஆயுஸ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜாவுக்கு கண்டனம். இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என கூறிய செயலாளர், ஆங்கிலம் தெரியாமல் யோகா பயிற்சி நடத்தவந்தது ஏன்..? ஆங்கிலம் தெரியாதுன்னு சொன்ன ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா பாடம் எடுக்க தகுதியற்றவர் மத்திய அரசு, உடனடியாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். “தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
india vs pakistan - shreyas iyer
Jayalalithaa Birthday - Rajinikanth
Sengottaiyan - ADMK Chief secretary Edappadi Palanisamy
Telangana tunnel collapse
TVK Leader Vijay - NTK Leader Seeman
gold prices