அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்ந்து பயணிக்கிறது – அமைச்சர் உதயகுமார்

Default Image

அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடர்ந்து பயணிப்பதாகவே தெரிவித்துள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று தேமுதிக நிறுவனர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது இல்லம் முன்இருந்த தொண்டர்களுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இனிப்பு வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்,கொரோனா காலத்தில் மாவட்டம் தோறும் கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைன் மூலம் ஆலோசனை நடத்திய போது தனித்து போட்டியிடுவதற்கு ஆதரவு தெரிவித்ததாக கூறினார். மேலும், தற்போது வரை அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக உள்ளது.

தேர்தலில் போட்டியிடுவது குறித்து டிசம்பர், ஜனவரியில் பொதுக்குழு கூட்டி முடிவு எடுக்கப்படும் எனவும், வருகின்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியா..? அல்லது தனித்து போட்டியிடுமா..? என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்று பிரமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.மேலும் விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டும் என   தேமுதிக தொண்டர்கள் விருப்பப்படுவதாக தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  விஜயகாந்த் கிங் ஆக இருக்க வேண்டும் என்று தேமுதிக தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பப்படுவது  அவர்களின் உரிமை .அதிமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்பதாகவே தேமுதிக தெரிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்