ஆளுநரை சந்தித்து மனு அளிக்க முயல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு, இன்று மாலை சென்னை ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து, அதிமுக முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஊழல் செய்ததற்காக 2-ம் கட்ட புகார் பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் கூறப்பட்டது. கடந்த 22-ம் தேதி திமுக 8 அமைச்சர்கள் மீதான புகார் பட்டியலை ஆளுநரிடம் அளித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அமைச்சர் பேசுகையில், நேரடியாக வர சொல்லுங்கள், விவாதத்தை நடத்த சொல்லுங்கள், முகமூடியை கிழிக்கிறோம் நாங்கள் என்று தெரிவித்துள்ளார்.
இன்றைக்கு எங்கள் மடியில் கனம் ஒன்றுமில்லை என்பதுனாலதான் வழியில் பயமில்லை என்ற அடிப்படையில் நாங்கள் நேருக்கு நேருக்கு திமுகவை விவாதம் நடத்த வர சொல்கிறோம். நேருக்கு நேர் வர தைரியம் இல்லாதவர்கள், ஆளுநரை சந்தித்து மனு அளிக்க முயல்வது அரசியல் காழ்ப்புணர்ச்சி, விளம்பரம் நோக்கம் என்றும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப கூறினால் உண்மையாகிவிடும் என்பது அந்த காலம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…
டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் பாதி முடிந்த நிலையில் அடுத்த பாதி போட்டிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. மெல்ல மெல்ல…
டெல்லி : காஷ்மீர், பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்த…