நடுரோட்டில் வீசப்பட்ட இளம்பெண்.! நடந்தது என்ன?

Default Image

காரிலிருந்து இளம் பெண் ரோட்டில் தூக்கி வீசப்பட்டார். வீசப்பட்ட கார் உடனடியாக வேகமாக மறைந்து சென்றது.காவல் துறையினர் தீவர விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.

தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் திங்கட்கிழமை அன்று  ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது அந்த பகுதியில் வழியாக வந்த காரிலிருந்து இளம் பெண் ஒருவர் வெளியில் தூக்கி வீசப்பட்டார். வீசப்பட்ட பின்பு கார் உடனடியாக வேகமாக மறைந்து சென்றது.

அங்கிருந்த மாதர் சங்கத்தின் சார்பில் மக்கள் அந்த பெண்ணின் அருகில் சென்று பார்த்தபோது அவர் உடலில் ரத்தக் காயங்களும் நடக்க முடியாத நிலையில் கிடந்தார். இதையடுத்து மாதர் சங்கத்தினர் பெண்னை ட 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்ததும் பெங்களூரில் அவரது பெற்றோர் பெற்றுள்ள வசிப்பதும் இவர் தஞ்சையில் வீட்டில் ஒன்று வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இவர் வேலை பார்த்த இடத்தில துன்புறுத்தல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து வங்க மொழியில் பேசும் காவலர் மூலம் அவரிடம் விசாரணை நடத்த முடிவு எடுத்துள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்