போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு என புகார் எழுந்தால், அதுகுறித்து விசாரிக்கும் வகையில் தனியாக பதிவேடு ஒன்றைப் பராமரிக்க வேண்டும் என 2011ம் ஆண்டு பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார். போலி ஆவணப்பதிவு எனத் தெரிய வந்தால் மாவட்ட பதிவாளர்கள் விசாரணை நடத்தி, பத்திரப் பதிவை ரத்து செய்யும் நடைமுறை இருந்து வந்தது.
இந்நிலையில், பத்திரப்பதிவில் முறைகேடு இருந்தால், பதிவாளர்களே விசாரணை நடத்தி ரத்து செய்யக்கூடாது எனவும், பாதிக்கப்பட்டவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, போலி ஆவண பதிவு தொடர்பான புகார் மனுக்களை மாவட்ட பதிவாளர்கள் விசாரிக்க கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களுக்காக பதிவேடு ஒன்றை பராமரிக்க வேண்டும் எனவும் பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், பத்திரப்பதிவு துணைத்தலைவர் மற்றும் மாவட்ட பதிவாளர்கள் அடங்கிய குழு ஒன்றை அவர் நியமித்துள்ளார்.
போலி ஆவண பதிவு தொடர்பாக அந்தந்த மாவட்ட பதிவாளருக்கு வந்த புகார்கள் குறித்தும், எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் இந்த குழுவினர் ஆய்வு செய்து வருகிற 25ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய பதிவுத்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
2011 முதல் 2017 வரை பராமரிக்கப்பட்டு வந்த புகார் பதிவேடு மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் பராமரிக்கப்படும் புதிய பதிவேடு ஆகியவற்றை இந்தக் குழு ஆய்வு மேற்கொள்ளும். அப்போது, மாவட்ட பதிவாளர்கள் எடுத்த நடவடிக்கை விதிமீறல் எனத் தெரிய வந்தால் அவர்கள் மீது துறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்டப் பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பதிவுத்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
source: dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…